Wednesday, July 11, 2007

நான் எழுதினேன்
ஏதோ ஒன்றைப்பற்றி
எழுதினேன்...
அது அழகாகத் தோன்றியதால்
எதைப்பற்றி எழுதுவது
என யோசித்து
எழுதினேன்...
இன்னும்
இதைப்பற்றியெல்லாம்
எழுதவேண்டும்
என
தீர்மானித்தும்
எழுதினேன்...

என் ஆசைகளை
கனவுகளை
எழுதினேன்...

என் அனுபவங்களை
எழுதினேன்

அனுபவம் என்றால்
இனிமை மட்டும் தானா?

கலைந்த என் கனவுகளின்
கசப்புச் சுவையையும்
கவிதைகளில் கலந்தேன்...

ஆசையின் பாதையில்
அனுபவ வெளிச்சத்தில்
தொலைந்த என் கனவுகள்
சிக்க மறுத்தாலும்
சிதறுண்ட முட்கள்
என் இலட்சிய பாதங்களை
சிதைக்காது போனதால்
சிந்தனை சிறைபடாததால்
கருத்துக்கள் கணம் பெற்றதால்
இன்னும் எழுதுவேன்....
நாளைய உலகில்
உண்மை ஓங்கிட
நேர்மை நிலைத்திட
இனிமை பொங்கிட
சிரித்து விளையாடும்
சின்னஞ்சிறார்களின்
சிந்தனையில்
கண்ணியம் மேவிடும்
கருத்துக்கள் மலர்ந்திட
கண்டிப்பாக எழுதுவேன்....