Thursday, November 29, 2018

கண்ணீர்



உள்ளத்தின்
உணர்வெல்லாம்
உறுகி உறுகி
ஓர் துளியாய்...
விழியோரம்
உனக்காக
காத்திருக்கும்...

Sunday, November 18, 2018

மழை



‘சல’’சல’
தாளம் போட்டு
‘சோ’வென்று
இராகம் கூட்டி
மண் வீழும்
மழையின் பாட்டு...

மனத்தோடு
மனதை கட்டி
உன்னோடு
எனனைச் சேர்த்து
உயிர் மீது
இன்பம் எழுதும்...

Tuesday, November 13, 2018

முப்பொழுதும் உன் கற்பனையில் ...




வீழ்கின்ற மழைத்துளியில்
விடிகின்ற செங்கதிரில்
நீழ்கின்ற வானத்தில்
நீந்துகின்ற நிலவொளியில்
பூவிதழில் வண்டினங்கள்
பாடுகின்ற இராகத்தில்
ஓவியமாய் என்நெஞ்சில்
உன்முகமே தோன்றுதிங்கே

நீ..
பேசாத வார்த்தைகளில்
புரிகின்ற அர்த்தங்கள்...

உன்னைக்..
காணாத பொழுதுகளில்
கண்ணீரில் நினைவலைகள்...

நாளும்..
வாடாத மலர்வீசும்
மணமெல்லாம் உன்நேசம்

என்சுவாசம்..
சேர்கின்ற காற்றும்உன்
உள்ளத்தின் மொழிபேசும்...