Friday, November 2, 2007

முழுமை

ஆண்மை என்றால்

ஆளுமை
அறிவு
வலிமை
வீரம்
தலைமை
தைரியம்
வேகம்
உறுதி

பெண்மை என்பது

மென்மை
பொறுமை
கணிவு
பரிவு
பாசம்
அன்பு
அடக்கம்

அடக்கமில்லா ஆளுமை - ஆகங்காரம்
அன்பில்லா அறிவு - வீணாகும்
அறிவில்லா அன்பு - வீணாக்கும்
பரிவு இல்லா தலைமை - சர்வாதிகாரம்
தைரியமில்லா அடக்கம் - கோழையாக்கும்
கணிவு இல்லா வீரம் - அழிக்கும்
மென்மையில்லா உறுதி - உடைக்கும்
விவேகமில்லா வேகம் - பாழாகும்

ஆண்மை கொண்ட பெண்ணும்
பெண்மை கலந்த ஆணும்
புகழ் பெரும்
பெருமை தரும்
பேராற்றல் பெரும்

முழுதாகும் வாழ்வு
முயன்றுதான் பாருங்களேன்...

2 comments:

ராமலக்ஷ்மி said...

அர்த்தநாரீஸ்வரரின் அர்த்தத்தை முழுமையாக விளக்கும் மிக அருமையான கவிதை. வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது என்னை உங்கள் சிந்தனையின் வேகம். வாழ்த்துக்கள் உமா.

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குங்க.